இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புறநானூறு | puranaanooru

   புறநானூறு                 சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படும் நூல்கள் பாத்துப்பாட்டும், எட்டுதொகையும் ஆகும்.  சங்க இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது.   அந்த எட்டுதொகை நூலில் உள்ள எட்டு நூல்களில் புறம் பற்றி கூறும் முதன்மையான நூல் புறநானூறு ஆகும்.  புறம் + நான்கு +நூறு = புறநானூறு  ஆகும்.  புறத்திணைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு புறநானூறு நூல் ஆகும்.  இன்னூலில் மொத்தம் நானூறு பாடல்கள் உள்ளன.  இன்னூல் நூற்று ஐம்பதெட்டு (158 புலவர்கள் ) புலவர் மக்களால் பாடப்பட்ட நூல் ஆகும்.  இன்னூல் அகவற்பா ( ஆசிரியப்பா ) என்னும் பா வகையால் ஆன நூல்.  இன்னூலை புறம் எனவும் புறப்பாட்டு எனவும் தமிழர் கருவூலம் எனவும் வேறு பெயர்கள் கொண்டும் அழைப்பர்.  இன்னூலுக்கு கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் "பாரதம் பாடிய பெருந்தேவனார் " ஆவார்.  இன்னூலை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு  செய்துள்ளார்.   புறநானூறு நூலில் உள்ள பாடல்களின் அடிகள் 4 அடி சி...

ஐந்து மூலிகைகளின் தொகுப்பு சிறுபஞ்சமூலம் | sirupanjamoolam in pathinenkeel kanakku

  சிறுபஞ்சமூலம்       பதினெண்கீழ்கணக்கு நூலகளில் 18 நூல்கள் உள்ளன.  அந்த 18 நூல்களில் சிறுபஞ்சமூலமும் ஒன்று.இன்னூல் "வெண்பா" என்னும் பாவகையால் ஆனது.  இன்னூலில் மொத்தம் கடவுள் வாழ்த்து பாடலுடன் 97 வெண்பாக்கள் உள்ளன.  சிறுபஞ்சமூலத்தை இயற்றியவர் காரியாசன் புலவர் ஆவார்.  " மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் "என்ற சிறப்பு பெயராலும் அழைக்கப்படுகிறார் என் சிறப்புப்பாயிரத்தில் கூறப்பட்டுள்ளது. இவருக்கு மாக்காரியாசன் என்ற மற்றொரு சிறப்பு பெயரும் உண்டு.   காரியாசனும் கனிமேதாவியாரும் ஒரே கல்வி சாலையில் கல்வி பயின்றவர்கள் ஆவர்.  இவர் சமண சமயத்தை சேர்ந்தவர்.  கண்டங்கத்தரி சிறுவழுத்துணை சிறுமல்லி பெறுமல்லி நெருஞ்சி ஆகிய ஐந்து மருத்துவ குணமிக்க தாவரத்தின் வேர்களும் மக்ககளின் உடல் நோய்களை அகற்ற பயன்படுத்தப்பட்டது.  அதுபோல இந்த சிறுபஞ்சமூலத்தில்  ஒவ்வொரு பாடலிலும் ஐந்து ஐந்து அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.  இந்த ஐந்து அறக்கருத்துக்களும் மக்களிடம் உள்ள அறியாமை என்னும் நோயை அகற்ற உதவுகிறது.  எனவே தான் இன்னூலுக்கு சிறுபஞ...

திரிகடுகம் | thirikadukam

     திரிகடுகம்             திரிகடுகம் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும்.  இன்னூலை எழுதியவர் நல்லாதனார்.  இவர் திருநெல்வேலி மாவட்டத்தில்  திருத்து என்னும் ஊரை சேர்ந்தவர்.  நல்லாதனார் வைணவ சமயத்தை சேர்ந்தவர்.  "செரு அடுதோள் நல்லாதன் " என்ற மற்றொரு பெயரும் இவருக்கு உண்டு.  திரி என்றால் மூன்று என்று பொருள்.   கடுகம் என்றால் காரமுடைய பொருள் ஆகும்.  சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருளால் ஆன மருந்தின் பெயர் திரிகடுகம் ஆகும்.  சுக்கு, மிளகு, திப்பிலி ஆன மருந்து பொருள் உடல் நோயை தீர்க்கும்.  திரிகடுகம் ஒவ்வொரு பாடலிலும் உள்ள மூன்று கருத்துகளும்  மக்களில் அறியாமையை நீக்கும் என்பது இதன் பொருள்.          செரு அடுதோள் நல்லாதன் என பாயிரம் குறிப்பிடுவதால் இவர் ஒரு போர் வீரராக இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.  இன்னூலின் ஒவ்வொரு பாடலிலும் மூன்று மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.  இன்னூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் "இம்மூன்று  (அ ) இம்மூவர்...

கற்போரின் குற்றம் நீக்கும் முதுமொழிக்காஞ்சி | muthumozhikkaanji in pathinenkeel kanakku

 முதுமொழிக்காஞ்சி         பதினெண்க்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று முதுமொழிக்காஞ்சி.  இன்னூலை எழுதியவர் மதுரை கூடலூர் கிழார் ஆவார்.  இவர் ஐங்குறுநூறு என்ற நூலையும் தொகுத்துள்ளார்.  இவர் பிறந்த ஊர் மதுரை ஆகும்.  இவர் வாழ்ந்த காலம் கி. பி ஐந்தாம் நூற்றாண்டு ஆகும்.  இன்னூலில் மொத்தம் 100 அடிகள் உள்ளன.  ஒரு பகுதிக்கு பத்து அடிகள் வீதம் பத்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.  அவை, சிறந்த பத்து அறிவுப் பத்து பழியாப் பத்து துவ்வாப் பத்து அல்ல பத்து இல்லைப்  பத்து பொய்ப் பத்து எளிய பத்து நல்கூர்ந்த பத்து மற்றும்        தண்டாப் பத்து         முதுமொழிக்காஞ்சி குறள் வெண் செந்துறை என்னும் யாப்பு அணியால் பாடப்பட்ட நூல் இது.   முதுமொழிக்காஞ்சி என்ற நூலின் பெயரில் காஞ்சி என்ற சொல்லுக்கு நிலையாமை என்பது அர்த்தம்.  முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சி திணை துறைகளுள் ஒன்று.  இன்னூலுக்கு "அறவுரைக்கோவை " என்ற வேறு பெயரும் உண்டு.  இன்னூல் கற்போரின் குற்றங்களை நீக்கி அறம், பொருள், இன்பம் அடைவதற...

பழமொழி நானூறு எழுதியவர் யார் | pazhamozhi naanooru in pathinenkeel kanakku

 பழமொழி நானூறு                   பழமொழி நானூறு என்ற நூல் மூன்றுறை அரையனார் என்பவரால் எழுதப்பட்டது. இன்னூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.  அரையன் என்பது  இவரின் குடியின் பெயர் ஆகும்.  மூன்றுறை என்பது இவர் ஊர் பெயர் ஆகும்.  இவர் சமண சமயத்தை சேர்ந்தவர் ஆவார்.  இன்னூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமைந்து இருக்கும்.  மேலும் இன்னூலில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன.  ஒவ்வொரு பாடலிலும் பழமொழி அமைந்துள்ளத்தாலும் நானூறு பாடல்கள் கொண்டு உள்ளதாலும் இன்னூல் " பழமொழி நானூறு என்று பெயர் பெற்றது. இன்னூலில் உள்ள நானூறு பாடல்களும் 34 அதிகாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் பழமொழியை முதுசொல் என்று குறிப்பிடுகிறார்.  இந்த நூலில் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், புலவர்கள், மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர்கள் பற்றிய செய்திகளும் கூறப்பட்டுள்ளது.  நீதி கூறும் நூல்களில் திருக்குறள் மற்றும் நாலடியார் நூல்களுக்கு அடுத்து புகழ்பெற்ற நூலாக வைத்து பார்க்கப்படுகிறது.   இன்னூலுக்கு வே...