அகநானூறு | aganaanooru
அகநானூறு
அகம் +நான்கு + நூறு இவற்றை சேர்த்து எழுத அகநானூறு என கிடைக்கும். அகநானூறு எட்டுத்தொகை நூலிகளில் ஒன்று. இன்னூலில் மொத்தம் நானூறு (400 பாடல்கள் ) பாடல்கள் உள்ளன. இந்த நானூறு பாடல்களும் நூற்று நாற்பத்து ஐந்து (145) புலவர்களால் பாடப்பட்டுள்ளது. இன்னூலை தொகுத்தவர் " மதுரை உப்பூரிகுடிக்கிழார் மகனார் உருத்திரசன்மர் " ஆவார். இன்னூலை தொகுப்பித்தவர் "பாண்டியன் உக்கிரப்பெருவழுதி " ஆவார். இன்னூல் 13 அடிகள் சிறுமையும் - 31 அடிகள் பெருமையும் கொண்டுள்ளது. அகநானூறுயின் பாவகை " அகவற்பா அல்லது ஆசிரியப்பா ". இன்னூலுக்கு வேறு பெயர்கள்,
1. நெடுந்தொகை,
2. பெறுந்தொகை நானூறு,
3. அகப்பாட்டு
- என வேறு பெயர்களும் உண்டு. இன்னூல் ஒரு அகநூல் ஆகும். இன்னூலின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் " பாரதம் பாடிய பெருந்தேவனார் " ஆவார். இன்னூல் மூன்று பிரிவுகளை உடையது. அவை,
பிரிவு | பாடல்களின் எண்ணிக்கை |
---|---|
கழிற்றியானை நிரை | 120 பாடல்கள் |
மணிமிடை பவளம் | 180 பாடல்கள் |
நித்திலக்கோவை | 100 பாடல்கள் |
குடவோலை முறை பற்றி கூறுகிறது. ஒழுங்கு முறையில் தொகுக்கப்பட்ட ஒரே தொகைநூல் அகநானூறு ஆகும். நந்தர்கள் தம் செல்வங்களை கங்கை ஆற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தியை கூறுகிறது.
" பல்புகழ் நிறைந்த வேல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியங் கொல்லோ? "
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
யவனர்கள் வாசனை பொருளான மிளகை பெறுவதற்கு வந்த செய்தியை,
"யவனர் தந்தவினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்துகறியோடு -
பெயரும் "
என்ற அடிகள் நன்கு விளக்குகின்றன. இன்னூலுக்கு உரை எழுதியவர் நா. மு. வேங்கடசாமி நாட்டார் ஆவார். பண்டைய தமிழர்களின் திருமணம் பற்றி கூறுகிறது. பண்டைய இலக்கியங்களில் செய்திகள் உள்ள நூல் அகநானூறு ஆகும். திணைக்குறிய பாடல்களின் எண்கள்,
திணை | பாடல் எண்கள் |
---|---|
குறிஞ்சி | 2,8,12,18,.... |
முல்லை | 4,14,24,.... |
மருதம் | 6,16,26,.... |
நெய்தல் | 10,20,30,.... |
பாலை | 1,3,5,7,9,... (ஒற்றைபடை எண்கள் ) |
அகநானூறு - பாடல் :
" ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன்-
மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறுவகுத்-
தன்ன
ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர்க் -
குருளை
மூன்றுடம் ஈன்ற முடங்கர் நிழத்த
குறுகல் விடரளைப் பிணவுப்பசி-
கூர்ந்தேனப்
பொறிகிளர் உழுவைப் போழ்வாய்-
ஏற்றை
அறுகோட்டு உழைமான் ஆண்குரல் -
ஓர்க்கும்
நெறிபடு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்
செலவயர்ந் திசினால் யானே -
பலபுலந்து
உண்ணா உயக்கமொடு உயிர்செலச் -
சா அய்த்
தோளும் தொல்கவின் தொலைய-
நாளும்
பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி
மருந்துபிறி தின்மையின் இருந்து-
வினை இலனே.
- ஔவையார்.
"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை
பகலுறை முதுமரம் புலம்பப் போகி
முகைவாய் திறந்த நகைவாய்-
முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக் -
கொடிமிசை
வண்டினந் தவிர்க்கும் தண்பதக்-
காலை
வரினும் வாரா ராயினும்-
ஆண்டவர்க்கு
இனிதுகொல் வாழி தோழி-
யெனத்தன்
பல்லிதழ் மலைக்கண் நல்லகம்-
சிவப்ப
அருந்துய ருடையள் அவளேன-
விரும்பிப்
பாணன் வந்தனன் தூதே; நீயும்
புல்லார் புரவி வல்விரைந்து பூட்டி
நெடுந்தேர் ஊர்மதி வலவ
முடிந்தன்று அம்மநாம் முன்னிய-
வினையே.
-மதுரை மள்ளனார்.
கருத்துகள்
கருத்துரையிடுக